கருப்பின அடிமையின் விடுதலை வரலாறு

பிலால் (ரலி) அவர்களை சுடுமணலில் கிடத்தி. மூர்ச்ச்சை ஆகும் அளவிற்கு அடித்து. தோல்களை சுடும் வெயிலில் வைத்து கரித்துக் கொண்டு இருக்கிறான். பிலாலின் எஜமானன் உமையா.
 

இவ்வாறு தன் அடிமையை அடித்து உதைத்து. சித்திரவதை செய்து கொண்டு இருக்கிறான். பிலால் என்னும் அந்த கருப்பின அடிமை அப்படி என்னதான் குற்றம் செய்தார்?.
 

அடிமை சாசனத்தை மீறி விட்டாரா இல்லை. தனது எஜமானான உமையாவிடம் திருடி விட்டாரா? அல்லது கொலை பாதகம் எதும் செய்து விட்டாரா?. 'பிலால் என்னும் ஒரு கருப்பின அடிமையின் வரலாறை படிக்கும் போது இதைதான் என் மனம் கேட்கிறது.
 

சுட்டெரிக்கும் கதிரவனின் அக்கினியை தாங்கிக் கொண்ட பிலால் என்னும் அடிமையை, சுடு மணலில் கிடத்த்தி பெரும் கரும்பாறைகளை பிலாலின் உடலின் மேல் அடுக்கி அழுத்தப் படுகிறது.
 

பிலால் என்னும் அந்த கருப்பு இன அடிமையின் 'உயிர்' இதயத்தின் ஒரு ஓரத்தில் போய் ஒட்டிக் கொண்டு இருக்கிறது. அங்கேதான் வருகை தருகிறார் அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்கள். இவரை நான் விலை கொடுத்து வாங்கி கொள்கிறேன் என்கிறார்.
 

பிலால் எதுக்குமே உதவாத அடிமை இவனின் விலை நூறு திர்ஹம். தந்து விட்டு தூக்கிச் செல் என்று உமையா கூறுகிறான். கொலை வதையில் இருந்து தனது உயிர் தப்பி விட்டதா! என்னும் ஆச்சரியத்தில். பிலாலின் இதயத்தின் ஓரம் போய் ஒட்டிக் கொண்டிருந்த உயிர்.
 

தனது புது எஜமானை பார்க்க கண்ணை திறந்து பார்க்கிறது. உடனே சுதாரித்துக் கொண்டான் உமையா உடனே பிலால் என்னும் தனது அடிமையின் விலையை இறுநூறு திர்ஹம் என்று மாற்றி கொண்டான்.
 


மனிதனின் நாக்குக்கு தனது கொள்கையை மாற்றிக் கொள்ளும் சக்தி எப்போதுமே அதற்கு உண்டு போல இருக்கு.அல்லது அதுதான் நாக்கின் சுபாவமா? எதுவோ இருந்து விட்டு போகட்டு. நாக்குக்குதான் எழும்பே இல்லையே கொள்கையாவது குப்பையாவது.
 

உமையாவின் கொலை களத்துக்கு அழையா விருந்தாளியாக வருகை தருகிறார் அபூசுப்பியான் அவர்கள். அபூசுப்பியான் அடிமைகளை அடித்து துண்புறுத்தும் கொடியவர் என்று எல்லாம் சொல்ல முடியாது.
 

அபூசுப்பியான் காதுகள் புடைக்க, கண்களின் புருவங்களை உயர்த்தினாலே போதும். அவரின் உடல் மொழி. அடிமையின் உடலை ஊடுறுவி சென்று விடும்.
 

அபூசுப்பியான் உமையாவிடம் கூறுகிறார். அடிமைகளை 'பதப்படுத்தி' கொண்டு இருக்கும் போது. விற்பனை செய்வது தகாது என்கிறார்.
பணத்தின் மேல் வெறி கொண்ட உமையா, அடிமை ஏற்க்கணவே செத்து விட்டான். செத்த பிணத்தை இறுநூறு திர்ஹமுக்குக்கு வாங்கி கொள்கிறானே என்று சந்தோஷப்படு என்று கூறுகிறான்.
 

பிலால் என்னும் அடிமையின் உடல் மீது அடுக்கியிருந்த பாறாங்கற்களை. ஒவ்வொன்றாக அப்புறப் படுத்துகிறார். ஸைத் இப்னு ஹாரிஸா என்னும் கருப்பு நிறத்தவர். பிலாலின் ஒரு கையை அபுபக்கரும் மறு கையை ஸைத் பின் ஹாரிஸாவும் பற்றி. எழுந்து விடு பிலால் என்று கூற...
 

அடிமைபட்டு சிறுமைப்பட்டு. அம்மார் ரலியின் உயிர் பரிப்பை எல்லாம் பதிவு செய்து கொண்டு பயந்து போய். பிலாலின் இதயத்தில் ஒளிந்து கொண்டு இருந்த. பிலாலின் உயிர் இப்போது வெளியே வந்தது 'சுதந்திரத்தை தேடி'
 


உமையா கேளிச் சிரிப்புடன் சொன்னான். ஒன்னுக்கும் உதவாத ஒரு அடிமையை இறுநூறு திர்ஹம் கொடுத்து வாங்கிச் செல்கிறான் முட்டாள் என்று நகைக்க. கேளிச் சிரிப்புடன் அங்கே இருந்தோர் நகைக்க. அபுபக்கர் (ரலி) இடி இடித்தது போல் சொன்னார்கள். அறிந்து கொள் உமையா. பிலாலுக்கு நீ ஆயிரம் திர்ஹம் கேட்டாளும் கொடுத்து வாங்கி இருப்பேன் என்றார்கள்...
 

பிலால் என்னும் அந்த கருப்பின அடிமையிடம். உமையாவுக்கு பிடிக்காது என்ன இருந்தது?. அபுபக்கருக்கு அந்த கருப்பின அடிமையிடம் என்னதான் பிடித்து இருந்தது.
 

பிலால் என்னும் இந்த கருபின அடிமை, தன்னை போல் அடிமையான அம்மார் (ரலி) யிடம் என்னதான் அறிந்து கொண்டார்?.
 

அம்மார் (ரலி) யும் அப்படி என்னதான் முஹம்மது (ஸல்) அவர்களிடம் தன் உயிரையே துறந்து விடக்கூடிய அளவிற்கு ரகசியத்தை அறிந்து கொண்டார்?.
 

அது ஒன்றும் பெரிய ரகசியம் எல்லாம் இல்லை. அல்லாஹ்வை நம்புவதும். அல்லாஹ்வின் தூதர் என்று முஹம்மதுவை நம்புவதுமே அந்த ரகசியம்.
 

பிலால் தனது தோழரை சந்திக்க. அபுபக்கர் (ரலி) யின் தோழ்களிலும். ஸைத் பின் ஹாரிஸாவின் தோழ்களிலும் சாய்ந்து கொண்டு நடக்கிறார்.......
 

உமையாவுக்கும், அபூசுப்பியானுக்கும், அபுலஹபுக்கும். அபுஜஹ்லுக்கும் அப்படி என்னதான் அந்த கருப்பின அடிமை பிரச்சணை பன்னினார். பிரச்சணையை அவரே கூறுகிறார்.
 

கொலை களத்துக்கு அம்மார் என்னும் அடிமையை அழைத்து வருகிறார்கள். பிலால் ஆகிய நான் எனது எஜமானன் உமையாவின் கட்டளைக்காக சுவற்றின் ஓரமாக காத்து இருக்கிறேன். கொலை களத்தில் இருந்த அரேபிய செல்வ சீமான்கள் அனைவரும் ஒன்று கூடி இருக்கிறார்கள்.
 

அம்மார் அடிமையிடம் கேட்கப்படுகிறது முஹம்மது என்ன சொல்கிறார்!. மனிதர்கள் யாவரும் ஒரு "சீப்பின் பற்களை" போன்றவர்கள் என்கிறார். முஹம்மது எல்லா "கடவுளையும்" ஒரே கடவுள் ஆக்கி விட்டாராமே என்று கேட்கிறார்கள். அம்மார் (ரலி) அவர்கள் ஆம் என்று கூறுகிறார்...
 

ஒரு அடிமை தனது எஜமானை எதிர்த்து பேசுவதை அடிமை வரலாற்றில் அம்மாரைதான் பார்த்தேன். அம்மாரை வதைக்கும் உரிமையை எனது எஜமானன் உமையா பிலால் ஆகிய எனக்கு தருகிறார். சாட்டையை கையில் வாங்கிய நான் அம்மாரை வதைக்க முன் போய் நின்றேன்...
 

முஹம்மது மனிதர்கள் யாவரும் ஒரு "சீப்பின் பற்களை" போன்றவர்கள் என்கிறார் என்ற உமையாவின் கூற்று. என் கைகளில் இருந்த சாட்டையை கைநழுவ செய்கிறது. இதை கண்ட அம்மார் (ரலி) அவர்கள். எனது கைகளில் இருந்து நழுவிய சாட்டையை துளவி எடுத்து என் கைகளில் தந்து. என்னை அடி பிலால் இல்லை என்றால் உன்னையும் அவர்கள் சும்மா விட மாட்டார்கள் என்றார்.
 

நான் அம்மாரை அடிக்கவே முடிய வில்லை. அதன் வெளிப்பாடே மேலே காணும் எனது சம்பவங்களில் சில...
 

இன்றைய சமூக சூழ்நிலையில் பிலாலை போல். கொள்கையை ஏற்ற பல கொள்கை சகோதரர்கள். அம்மார் (ரலி) கூற்றை கருத்தில் கொள்வதே இல்லை. பிலால்களாக மாறி சிறையில் வதைபடுகிறார்கள்.
அபுபக்கர் (ரலி) ஈகை குணத்தையும், வீரத்தையும் மறந்தே போனது எனது சமூகம்.
மேலும் வாசிக்க...